search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் கொலை"

    • சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மனைவி கோமதி (வயது 42). இவர்களது மகள் பவித்ரா(24) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பவித்ரா தனது கணவரை பிரிந்து விஸ்வநாதபுரத்தில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். மேலும் அவர் குத்துக்கல்வலசையில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று மாலை கோமதியும், பவித்ராவும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த 2 வாலிபர்கள் பவித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றனர். உடனே கோமதி அதனை பார்த்து அவர்களை தடுக்க முயன்றுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 2 வாலிபர்களும் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினர். அதனை தடுக்க வந்த பவித்ராவுக்கும் கழுத்து, தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். உடனே அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோமதி மற்றும் பவித்ரா ஆகியோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பவித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ரா கடையில் வேலை பார்த்தபோது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பவித்ராவை பிடித்துள்ளது. உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பவித்ராவை அந்த வாலிபர் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும், ஆனால் பவித்ரா அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த வாலிபர் தனது நண்பரை அழைத்து வந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூய்மைப் பணியாளர் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்ச நீர் காயல் பகுதியை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா. இவரது மனைவி கனகா(வயது 31). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் தெற்கு மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது 3 குழந்தைகளுடன் கனகா மஞ்சள் நீர் காயலில் வசித்து வந்தபடி தூத்துக்குடியில் தூய்மை பணியாளராக வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவருக்கும், பசுவந்தனையை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கனகா வழக்கம்போல் வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டார். தொடர்ந்து தனியார் பஸ்சில் மஞ்சநீர் காயலில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கனகா, தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த ஒருவர் கனகா அருகே வந்தார். திடீரென தனது கையில் வைத்திருந்த அரிவாளால் கனகாவின் கழுத்தில் வெட்டி விட்டு தப்பிச் சென்றார்.

    இதில் கனகா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அந்த பகுதியில் நின்ற பயணிகள் கனகாவை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு எப்போதும் வென்றான் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் தற்போது 2-வதாக பஸ் நிறுத்தத்தில் வைத்து தூய்மைப் பணியாளர் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.
    • சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பண்டாரம் மகன் வைரமுத்து. இவரது மனைவி சின்னமணி (வயது 35).

    இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து இறந்துவிட்டார். இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டையில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    சின்னமணிக்கும், அவரது கணவரின் தம்பி ராஜேஸ் கண்ணன் (20) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், இன்று காலை சின்னமணி எப்போதும் வென்றான் வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து சின்னமணி புதுக்கோட்டை செல்வதற்காக எப்போதும் வென்றான் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்குவந்த ராஜேஸ் கண்ணன், சின்னமணியை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். பின்னர் அவர் எப்போதும் வென்றான் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், சின்னமணியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டப்பகலில் பஸ் நிறுத்தத்தில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி புது கணவருடன் வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்கே வந்து விட்டார்.
    • தனி அறையில் இருந்த மகாலட்சுமியை அக்காள் என்றும் பாராமல் அவரையும் அரிவாளால் வெட்டி சாய்த்தார்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தி பெருமாள் மகன் சதீஷ்குமார் (வயது 28). இவர் கம்பி கட்டும் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த அழகுமலை-சின்ன பிடாரி தம்பதியின் மகள் மகாலட்சுமி (வயது 24) என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகாலட்சுமியின் பெற்றோர் வேறு ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தனர். ஆனாலும் மகாலட்சுமி தனது கணவருடன் குடும்பம் நடத்த மனமின்றி விரக்தியில் இருந்து வந்தார்.

    இதையடுத்து திருமணமான ஒரே வாரத்தில் மகாலட்சுமி புது கணவருடன் வாழாமல் தனது பெற்றோர் வீட்டிற்கே வந்து விட்டார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு அறிவுரைகள் கூறியும் மகாலட்சுமி கண்டுகொள்ளவில்லை. மாறாக வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

    இந்த விஷயம் அறிந்த முன்னாள் காதலன் சதீஷ் குமார் மீண்டும் மகாலட்சுமியிடம் காதலை தொடர்ந்தார். பெற்றோர் வெளியில் சென்றிருந்த சமயங்களில் மகாலட்சுமி அடிக்கடி சதீஷ்குமாரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

    இந்த விபரம் தெரிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமார் கடுமையான ஆத்திரம் அடைந்தார். மேலும் சதீஷ்குமாரையும், மகாலட்சுமியும் கண்டித்துள்ளார். ஆனாலும் சதீஷ்குமார் அத்துமீறி மகாலட்சுமியுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார். எனவே இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட எண்ணிய பிரவீன் குமார், சதீஷ்குமாரை தீர்த்துக்கட்டவும் திட்டம் தீட்டினார்.

    இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து கொம்பாடியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சதீஷ்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிரவீன்குமார், அக்காவின் முன்னாள் காதலன் சதீஷ்குமாரின் கண்ணில் மிளகாய் பொடியை தூவினார். இதனை சற்றும் எதிர்பாராத சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற பிரவீன்குமார், சதீஷ்குமாரை அங்கிருந்த நாடக மேடை அருகே சுற்றி வளைத்து மடக்கினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சதீஷ்குமாரை சரமாரியாக வெட்டியதுடன், அவரது தலையை தனியாக துண்டித்து நாடக மேடையின் நடுவில் வைத்தார்.

    இருந்தபோதிலும் ஆத்திரம் தீராத பிரவீன்குமார், அதே கொலை வெறியுடன் தனது வீட்டிற்கு சென்றார். அங்கு தனி அறையில் இருந்த மகாலட்சுமியை அக்காள் என்றும் பாராமல் அவரையும் அரிவாளால் வெட்டி சாய்த்தார். அந்த சமயம் வெளியில் சென்றிருந்த பிரவீன்குமாரின் தாய் சின்ன பிடாரி வீட்டிற்குள் வந்தார்.

    ரத்தம் சொட்ட சொட்ட அரிவாளுடன் நின்றி மகனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஓடிச்சென்று தடுக்க முயன்றார். ஆனாலும் வெறி அடங்காத பிரவீன் குமார் தாயின் கையையும் வெட்டி துண்டாக்கினார். இதற்கிடையே அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுதொடர்பாக சதீஷ் குமாரின் தம்பி முத்துக் குமார் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு கூடக்கோவில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொலையுண்டு கிடந்த சதீஷ்குமார், மகாலட்சுமி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கை துண்டான சின்ன பிடாரியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இரண்டு கொலைகளை செய்துவிட்டு தலைமறைவான பிரவீன்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இச்சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • கவுந்தப்பாடி பகுதியில் பரபரப்பு நிலவியது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பூமாண்ட கவுண்டனூரைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி (63). இவரது மனைவி தமயந்தி. இவர்களுக்கு பூரணி (28) என்ற மகளும், பிரவீன் என்ற மகனும் உள்ளனர்.

    கவுந்தப்பாடி அடுத்த சின்னியம் பாளையத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (53). இவரது மனைவி பூங்கொடி (51). இவர்களின் மகன் மதன்குமார் (29).

    இந்த நிலையில் பூரணி கல்லூரியில் படிக்கும் போது மதன்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு பூரணியும், மதன்குமாரும் வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். தொடர்ந்து இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இதற்கிடையில் பூரணியிடம் அவரது பெற்றோர் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட்டு மாதம் பூரணியை பிரசவத்திற்காக கோபி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    அப்போது குழந்தை மற்றும் பூரணியை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் வந்தனர். அப்போது பூரணியை பார்க்கக் கூடாது என்று மதன்குமாரும் அவரது தாயார் பூங்கொடியும் திருப்பி அனுப்பி விட்டதாகவும், குழந்தையை பார்க்க சென்ற பூரணியின் உறவினர்களை திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையில் சின்னியம்பாளையத்தில் உள்ள பூரணியில் பக்கத்து வீட்டுக்காரர் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து பூரணிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை அதனால் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரி கொண்டு செல்கிறோம் என்று கூறியதாக தெரிகிறது.

    கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு பூரணியை கொண்டு சென்று அங்கு பரிசோதித்த உடன் அங்கிருந்து அதே ஆம்புலன்சில் கோபி சத்தி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கிருந்து கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பூரணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று கவுந்தப்பாடி போலீசில் பூரணியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து கோபி வருவாய் கோட்டாட்சியர் பிரிய தர்தர்சினி தலைமையில் விசாரணை நடந்தது. மேலும் கோபி டி.எஸ்.பி தங்கவேல் விசாரணை நடத்தினார். பின்னர் பூரணி உடல் பிரேத பரிசோதனை பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.

    பிரேத பரிசோதனை முடிவில் பூரணி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மதன்குமார் தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார்.

    இதுகுறித்து பூரணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் திரண்டு வந்து தலைமறைவாக இருக்கும் மதன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கோபி அடுத்த ஒத்தக்குதிரை பகுதிகளில் பதுங்கி இருந்த பூரணியின் கணவர் மதன்குமார், மாமனார் யுவராஜ், மாமியார் பூங்கொடி ஆகியோரை கவுந்தப்பாடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோபி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

    பின்னர் மதன்குமார் மற்றும் யுவராஜா ஆகியோர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். பூங்கொடி கோவையில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் கவுந்தப்பாடி பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • செல்வியிடம் பறித்த நகையில் தாலிக்கொடியை எனது விவசாய தோட்டத்தில் புதைத்து வைத்தேன்.
    • கொலையான செல்விக்கு 2 குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிறந்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (வயது 38). இவருடைய மனைவி செல்வி (28).

    இவர் நேற்று முன்தினம் இளம்பிள்ளை அருகில் உள்ள திருமலைகிரி பாறைக்காட்டூர் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார். இது குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு சென்ற செல்வியை குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்த திருமலைகிரி பெருமாம்பட்டியை சேர்ந்த கோவில் பூசாரி குமார் (42) என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

    செல்வியை கொலை செய்தது குறித்து பூசாரி குமார் போலீசாரிடம் வாக்குமுலம் அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எனது மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். எனக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கட்டி அதில் பூசாரியாக இருந்தேன். கடன் பிரச்சனை மற்றும் குழந்தையின்மைக்கு தீர்வு என பல்வேறு பிரச்சனைகளுக்கு அருள்வாக்கு பெற எனது கோவிலுக்கு பலர் வந்தனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பல பெண்களுடன் சகஜமாக பேசி எனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவித்து வந்தேன். குறிப்பாக 20 பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளேன்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த செல்வியை எனது வலையில் வீழ்த்த நினைத்து நைசாக பேசி வந்தேன். பூசாரி என்பதால் என்னிடம் செல்வி சகஜமாக பேசினார். அவரிடம் உல்லாசம் அனுபவிக்க நான் நினைத்தேன். அதே நேரத்தில் அவர் தங்க நாணயம் குறைவான விலைக்கு தனக்கு கிடைப்பதாகவும் தான் வாங்கி தருவதாகவும் கூறினார். அதை நம்பி நானும் ரூ.20 ஆயிரம் கொடுத்தேன்.

    ஆனால் செல்வி தங்க நாணயம் வாங்கி தரவில்லை. இருந்தாலும் அவரை எனது வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவிக்க மீண்டும் திட்டம் போட்டேன். அவர் அதற்கு உடன்படாமல் மறுத்து விட்டார். இது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அடைந்தது. உல்லாசத்துக்கும் மறுத்து விட்டார். தங்க நாணயமும் வாங்கி தரவில்லை. எனவே எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி செல்போனில் அவரை கோவிலுக்கு வருமாறு அழைத்தேன். அவரும் காலை 11 மணியளவில் கோவிலுக்கு வந்தார். அங்கிருந்து எனது வீட்டுக்கு அவரை அழைத்து சென்றேன். அங்கு ஆசைக்கு இணங்க செய்யலாம் என திட்டமிட்டேன். அதற்கு செல்விக்கு விருப்பம் இல்லாததை உணர்ந்தேன். ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில் அவரிடம் கொடுத்த பணமும் வீணாக போச்சே என்று நினைத்த போது அவர் அணிந்திருந்த நகைகள் என் கண்களை உறுத்தின.

    ஏற்கனவே காட்டு பகுதியையொட்டி எனது வீட்டின் அருகே நாய் தொல்லை இருப்பதால் அவற்றுக்கு விஷம் வைக்க, வெள்ளிப்பட்டறையில் பயன்படுத்தும் சயனைடு வாங்கி வீட்டில் வைத்திருந்தது ஞாபகம் வந்தது. அந்த விஷத்தை 10 ரூபாய் குளிர்பானத்தில் கலந்து கொடுத்து செல்வியை கொலை செய்ய திட்டமிட்டேன்.

    அவரிடம் நைசாக பேசி சயனைடு கலந்த குளிர்பானத்தை கொடுத்தேன். குளிர்பானத்தை குடித்த செல்வி சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்து விட்டார். அதன்பிறகு நான் அவரது உடலை தூக்கிச்சென்று சுமாா் 200 மீட்டர் தொலைவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத புதர்பகுதியில் வீசினேன். இதற்கு முன்னதாக செல்வி கழுத்தில் இருந்த தாலி மற்றும் நகை என 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

    பின்னர் செல்வியிடம் பறித்த நகையில் தாலிக்கொடியை எனது விவசாய தோட்டத்தில் புதைத்து வைத்தேன். மீதமுள்ள 5 பவுன் நகையை எனக்கு பழக்கமான சேலம் சன்னியாசிகுண்டு பகுதியைச் சேர்ந்த இன்னொரு செல்வியிடம் கொடுத்து அம்மாபேட்டை நகர கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் நகைக்கடனாக பெற்றேன்.

    அதில் 80 ஆயிரம் ரூபாயை எனது நண்பரிடம் வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதமுள்ள பணத்துடன், எனது கள்ளக்காதலியை அழைத்துக்கொண்டு ஏற்காட்டுக்கு சென்று அன்று இரவே விடுதியில் அறை எடுத்து தங்கி உல்லாசம் அனுபவித்து வந்தேன். இந்த நிலையில் செல்வியின் செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் நான் போலீசிடம் சிக்கி கொண்டேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    போலீசார் பூசாரி குமாரை அழைத்துச் சென்று அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சேலம் சிறையில் அடைத்தனர்.

    கொலையான செல்விக்கு 2 குழந்தைகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிறந்து உடல்நலக்குறைவால் இறந்து விட்டன. இதனால் குழந்தை வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்த செல்வி அந்த கவலையை மறக்க இன்ஸ்டாகிராமில் 200-க்கும் மேற்பட்ட பதிவுகளை இட்டு பிரபலம் அடைந்தார். அவரை 1,200-க்கும் மேற்பட்டோர் பின்பற்றி வந்துள்ள நிலையில், குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் மேலோங்கியது. இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருமலைகிரி பெருமாம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு சென்று குழந்தை வரம் வேண்டி வழிபட்ட செல்விக்கும், பூசாரி குமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆசைக்கு இணங்க மறுத்த நிலையில் குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து இன்ஸ்டாகிராம் பெண்ணை பூசாரி கொன்ற பயங்கர சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த 15-ந்தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • போலீசார் பூசாரி குமார், அவரது கூட்டாளி மோகன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஆரூர் பட்டி கிராமம் சேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ் (38). இவர் பெங்களூரில் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி (28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த ஓராண்டாக செல்வி குழந்தை பேறுக்காக மருத்துவம் பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற செல்வி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது கணவர் பசவராஜ் அக்கம், பக்கத்தில் விசாரித்து பார்த்தார். ஆனாலும் அவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. இதையடுத்து அவர் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சேலம் சிவதாபுரம் அடுத்த திருமலைகிரி அருகே உள்ள பெருமாம்பட்டி பாறைக்காட்டூர் என்ற பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகில் முட்புதரில் ஒரு பெண் பிணமாக கிடந்தார். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த பெண் மாயமான செல்வி என்று தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தெரியவந்ததும் தாரமங்கலம் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது திருமலைகிரி பெருமாம்பட்டியை சேர்ந்த குமார் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த 25 ஆண்டுகளாக தனது தோட்டத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வைத்து வழிபட்டு வந்தது தெரியவந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக செல்வி குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது செல்வி பூசாரி என்ற முறையில் குமாரிடம் பேசி பழகி உள்ளார்.

    அதே போல் சம்பவத்தன்றும் செல்வி வழக்கம் போல் கோவிலுக்கு வந்து உள்ளார். அப்போது பூசாரி குமார், செல்வியை உல்லாசத்துக்கு அழைத்து உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்து செல்வி மறுத்து விட்டார். இதுப்பற்றி வெளியே சொன்னால் அவமானப்பட்டு விடுவோம் என்று கருதி செல்வியை கொலைசெய்ய முடிவு செய்தார். அதன்படி குளிர்பானத்தில் சயனைடு கலந்து செல்விக்கு கொடுத்து உள்ளார். இதை வாங்கி குடித்த செல்வி சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்து இறந்து விட்டார். பின்னர் அவரது உடலை அருகில் உள்ள முட்புதரில் தூக்கி வீசியுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பூசாரி குமார், அவரது கூட்டாளி மோகன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ளது கோழித்துறை பகுதி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ரகுநாதன்(வயது40). கூலித்தொழிலாளி.

    இவருக்கு திருமணமாகி ராணி(35) என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ரகுநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

    தினமும் ரகுநாதன் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற ரகுநாதன் இரவில் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கண்டித்தார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை.

    அவரது மகள் ஏன் தினமும் குடித்து விட்டு வருகிறீர்கள் என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுநாதன், மகளை அங்குள்ள அறையில் பூட்டி வைத்து தாக்கினர்.

    இதை பார்த்து அதிர்ச்சியான ராணி கதவை திறந்து மகளை காப்பாற்றினார். பின்னர் மகன்களையும், மகளையும் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.

    கடும் கோபம் கொண்ட ரகுநாதன் தனது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.

    ஆத்திரம் தீராத அவர் வீட்டில் கிடந்த கட்டையை எடுத்து ராணியின் தலை மற்றும் உடல் முழுவதும் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து விட்டார்.

    பின்னர் ரகுநாதனும் குடிபோதையில் அப்படியே படுத்து விட்டார். சில மணி நேரங்கள் கழித்து போதை தெளிந்து எழுந்த அவர், மனைவி இறந்து கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சியானார்.

    மனைவியை அடித்து கொன்று விட்டோமே என்றும், போலீசார் எப்படியும் தன்னை விசாரிப்பார்கள் என்ற பயத்திலும் இருந்த ரகுநாதன் அதிகாலையில், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்தவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் ராணி இறந்த நிலையிலும், ரகுநாதன் தூக்கில் பிணமாகவும் தொங்கி கொண்டிருந்தனர்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெண் அதிகாரி பிரதிமாவை கழுத்தை நெரித்து கொன்று பின்னர் கத்தியால் சரமாரியாக குத்தியது தெரியவந்தது.
    • கைதான கிரணை போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து செல்கின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே உள்ள துடுகி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரதிமா (37). இவர் பெங்களூருவில் உள்ள கனிம வளம் மற்றும் நில அறிவியல் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் மகனை பிரிந்து பிரதிமா மட்டும் பெங்களூரு தொட்டஹள்ளசந்திரா அருகே உள்ள குவெம்பு நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பிரதிமா அரசு காரில் தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார். பின்னர் டிரைவர் காரை அலுவலகத்துக்கு எடுத்து சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் பிரதிமா வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதற்கிடையே பிரதிமாவின் அண்ணன் காண்டிராக்டர் பிரதிஷ் என்பவர் பிரதிமாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து 3 முறை அழைத்தும் பிரதிமா செல்போனை எடுக்காததால், அவரது அண்ணன் பிரதிஷ் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று தூங்கச் சென்றார்.

    பின்னர் மீண்டும் காலையில் எழுந்து தொடர்பு கொண்டார். அப்போதும் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரதிஷ் தனது தங்கையின் வீட்டிற்கே நேராக சென்றார்.

    அங்கு பிரதிமா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து சுப்ரமணியபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட பிரதிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கினர். கனிம வள அதிகாரி என்பதால் இவருக்கு பிடிக்காதவர்கள் யாராவது கூலிப்படை அனுப்பி கொலை செய்தார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதோடு கொலை செய்யப்பட்ட பெண் அதிகாரி பிரதிமாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட பெண் அதிகாரியுடன் பணியாற்றி வரும் சில அதிகாரிகள் கூறும்போது, கொலை செய்யப்பட்ட பிரதிமா மிகவும் நேர்மையான அதிகாரி. துணிச்சலானவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில இடங்களில் சோதனைக்கு சென்றார். இந்த துறையில் அவருக்கு நல்ல பெயர் உள்ளது. எங்கிருந்து போன் வந்தாலும் உடனடியாக சென்று விசாரணை நடத்துவார் என்றனர்.

    இதற்கிடையே பிரதிமாவை அழைத்து வந்து வீட்டில் விட்ட கார் டிரைவர் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. எனவே அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலை செய்யப்பட்ட பிரதிமாவிடம் முன்பு கார் டிரைவராக வேலை பார்த்த கிரண் (32) என்பவரை ஏன் வேலையை விட்டு நீக்கினார் என்றும் விசாரணை நடத்தினர்.

    அப்போது பரபரப்பு தகவல் வெளியானது. கனிம வள அதிகாரியான பிரதிமா அடிக்கடி ரகசிய சோதனைக்கு செல்லும்போது அதை முன்கூட்டியே டிரைவர் கிரண் சம்மந்தப்பட்டவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதுபற்றி தெரிய வந்ததும் அவரை பிரதிமா வேலையை விட்டு நீக்கியது தெரியவந்தது.

    சம்பவத்தன்று அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த பிரதிமாவை வேலையை விட்டு நீக்கப்பட்ட கார் டிரைவர் கிரண் வந்து சந்தித்து மீண்டும் வேலை கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கிரண் பெண் அதிகாரி பிரதிமாவை கழுத்தை நெரித்து கொன்று பின்னர் கத்தியால் சரமாரியாக குத்தியது தெரியவந்தது. மேலும் போலீசார் அவரை தேடியபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது.

    தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் கிரண் சாம்ராஜ்நகர் மாவட்டம் மலைமாதேஸ்வரன் கோவில் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உள்ளூர் போலீஸ் உதவியுடன் அவரை கைது செய்தனர். கைதான கிரணை போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து செல்கின்றனர்.

    • பிரதிமா வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே உள்ள துடுகி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிரதிமா (37). இவர் பெங்களூருவில் உள்ள கனிம வளம் மற்றும் நில அறிவியல் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவர் மற்றும் மகனை பிரிந்து பிரதிமா மட்டும் பெங்களூரு தொட்டஹள்ளசந்திரா அருகே உள்ள குவெம்பு நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் பிரதிமா அரசு காரில் தனது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தார். பின்னர் டிரைவர் காரை அலுவலகத்துக்கு எடுத்து சென்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவில் பிரதிமா வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இதற்கிடையே பிரதிமாவின் அண்ணன் காண்டிராக்டர் பிரதிஷ் என்பவர் பிரதிமாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. தொடர்ந்து 3 முறை அழைத்தும் பிரதிமா செல்போனை எடுக்காததால், அவரது அண்ணன் பிரதிஷ் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று தூங்கச் சென்றார்.

    பின்னர் மீண்டும் காலையில் எழுந்து தொடர்பு கொண்டார். அப்போதும் போன் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரதிஷ் தனது தங்கையின் வீட்டிற்கே நேராக சென்றார்.

    அங்கு பிரதிமா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து சுப்ரமணியபுரா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட பிரதிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கி உள்ளனர். கனிம வள அதிகாரி என்பதால் இவருக்கு பிடிக்காதவர்கள் யாராவது கூலிப்படை அனுப்பி கொலை செய்தார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு கொலை செய்யப்பட்ட பெண் அதிகாரி பிரதிமாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். பிரதிமாவை அழைத்து வந்து வீட்டில் விட்ட கார் டிரைவர் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார். எனவே அவரிடமும், அவருக்கு முன்பு டிரைவராக பணியாற்றியவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட பெண் அதிகாரியுடன் பணியாற்றி வரும் சில அதிகாரிகள் கூறும்போது, கொலை செய்யப்பட்ட பிரதிமா மிகவும் நேர்மையான அதிகாரி. துணிச்சலானவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில இடங்களில் சோதனைக்கு சென்றார். இந்த துறையில் அவருக்கு நல்ல பெயர் உள்ளது. எங்கிருந்து போன் வந்தாலும் உடனடியாக சென்று விசாரணை நடத்துவார் என்றனர்.

    கர்நாடக மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பெண் அதிகாரி கொலை குறித்து முதல் மந்திரி சித்தராமையா கூறும்போது, இந்த கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றார்.

    • ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சக்தி சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
    • போலீசார் சக்தியின் மனைவி மணிமுடியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் கொசவன்கரடு பகுதியை சேர்ந்தவர் சக்தி (42). லாரி டிரைவர். இவரது மனைவி மணிமுடி (35). இவர்களது மகள் கேந்திரியா (11) அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    இந்த நிலையில் சக்தி குடி பழக்கத்திற்கு அடிமையானதால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மணிமுடி கணவர் சக்தியை வீட்டிலிருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக அடித்துள்ளார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த சக்தி சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து கொளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சக்தியின் மனைவி மணிமுடியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாந்தி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்தார்.
    • வெளியூர் செல்லும் கணேசன் போன் பண்ணும் போது சாந்தி எடுக்காமல் இருந்ததுடன், வேறு யாருடனோ பேசி கொண்டு இருந்துள்ளார்.

    திருப்பூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பவளக்கொடி என்கிற சாந்தி (வயது 37). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சாந்திக்கும் அந்த பகுதியை சேர்ந்த கணேசன் (43) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த 2 பேரின் வீட்டினர் கண்டித்தனர்.

    இதையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் வந்தனர். திருப்பூர் கோவில் வழியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். கணேசன் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இதனால் அவர் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.

    இந்தநிலையில் சாந்தி அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்தார். வெளியூர் செல்லும் கணேசன் போன் பண்ணும் போது சாந்தி எடுக்காமல் இருந்ததுடன், வேறு யாருடனோ பேசி கொண்டு இருந்துள்ளார். இதனால் சாந்தி மீது கணேசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் கணேசன் வேலைக்கு சென்றதும் சாந்தி வீட்டில் இருந்து வெளியே சென்று வந்துள்ளார்.

    இந்தநிலையில் சாந்தி வெளியில் எங்கு செல்கிறார் என்பதை கண்டறிய கணேசன் திட்டமிட்டார். அதன்படி நேற்றிரவு வேலைக்கு செல்வதாக கூறிய கணேசன், சாந்தியை நோட்டமிட அங்கு ஒரு இடத்தில் மறைந்து கொண்டார்.

    கணேசன் வேலைக்கு சென்றதாக நினைத்து கொண்ட சாந்தி, வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவரை பின்தொடர்ந்து கணேசன் சென்றார். அப்போது சாந்தி திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு சென்றதுடன், அங்கு வேறு ஒரு வாலிபருடன் பேசி கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணேசன், சாந்தியிடம் நான் இருக்கும் போது, எப்படி வேறு ஒருவருடன் பழகலாம் என்று தட்டிக்கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த கணேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாந்தியை சரமாரி குத்தினார். இதில் சாந்தியின் தலை, கை, உடல்களில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடினார். உடனே அங்கு நின்ற பயணிகள் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிய சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்காதல் பிரச்சனையில் பெண்ணை பனியன் நிறுவன டிரைவர் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×